குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் ஒன்று லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. அதில் 242 பேர் பயணத்த நிலையில் 241 பேர் உயிர் இழந்தனர். இதன் உதறி பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் டாடா குழுமத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு விதித்துள்ளது. அதாவது “ஏர் இந்தியா” நிறுவனம் இயக்கும் “போயிங் 787- 8”, “போயிங் 787- 9” போன்ற ரக விமானங்களை மறுபரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவுவிட்டுள்ளது.
மேலும் விமானம் புறப்படும் முன்பு எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு மற்றும் Take off தொடர்பான சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என ஆய்வகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.