82 கனரக வாகனம் மீது வழக்கு பதிவு…!! போக்குவரத்து போலீசார் அதிரடி..!!

சென்னை பெரம்பூரில் கடந்த 18ஆம் தேதி அன்று லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சென்னையில் கனரக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், கனரக வாகனத்திற்கான இயக்குவதற்கான அனுமதி நேரத்தை அறிவித்தார்.

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாலை நான்கு மணி முதல் இரவு 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் அனுமதிக்க கூடாது என உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

அதன்படி போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதில் நேற்று சுமார் 207 கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வாகனங்களை இயக்கிய காரணத்தினால் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று 82 கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வாகனங்கள் இயக்கியதினால் அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News