ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை உலகளவில் ரூ.140 கோடி வசூல் செய்துள்ளது. இன்னொருபுறம் இப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பேட்டியில் இந்தியன் 2 படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து கேட்கப்பட்டது. இதனால் டென்ஷனான பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தை பார்க்க அறிவாளிகள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆடியன்ஸ் வந்தாலே போதும்.
குடும்ப ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என பாபி சிம்ஹா கூறியுள்ளார். மேலும், இந்தியன் 3 திரைப்படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு முழுப்படமும் புரியும் என்றும் இந்தியன் 3 மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் பாபி சிம்ஹா கூறியுள்ளார்..அவரது பேச்சு சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.