அரசியலில் இருந்து விலகும் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்!

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யானார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், “வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய். ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News