ரிதன்யா தற்கொலை வழக்கு..!! நீதிபதி அதிரடி உத்தரவு..!!

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கிழ் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (வயது 27) வரதட்சனை கொடுமை காரணமாக கடந்த ஜூன் 29ம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த சேவூர் போலீஸார் ரிதன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில்., ரிதன்யாவின் பெற்றோர் 300 பவுன் தங்க நகைகளும்., சொந்த வீடு மற்றும் கார் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆனால் இந்த வரதட்சனை போதாது என கவின்குமார் குடும்பத்தினர்., அப்பெண்ணை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது..

தற்கொலை செய்து கொண்ட பெண் கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய ஆடியோவை தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அதில்., “என்னால முடியலப்பா ரொம்ப கொடுமை பண்ணுறாங்க உங்கள அம்மாவை தப்பா பேசுறாங்க, என்னை மன்னிச்சுடுங்க அப்பா நான் போறேன்” என கண்ணீர் மல்க பேசிய ஆடியோ பலரிடையே கொந்தளிப்பிளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதன் பின்னர் வாட்ஸ் ஆப் ஆடியோக்களை ஆதரங்களாக வைத்து., அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆனால் கவின்குமார் தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக வேதனை தெரிவித்தார்.

அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட பின்னர் கவின்குமார் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் அவர்களது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்., தன்னுடைய மகளின் தற்கொலை தூண்டலுக்கு காரணமானவர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் படி புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் கவின்குமார் குடும்பத்தினர் ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யாவின் பெற்றோர் இடையிட்டு மனு தாக்கல் செய்தனர்., நேற்று இவ்வழக்கு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Recent News