ஒரு முறையாவது கமலுடன்..! மனம் திறந்த பிரபல நடிகை..!!

உலக நாயகன் கமல்ஹாசன் என்றால்., அவரை தெரியாத நபர் இருக்கவே முடியாது. சிறு வயதில் இருந்தே நடித்து கொண்டிருக்கும் இவரை., இந்த ஜெனரேஷன் குழந்தைகளும் அறிந்திருக்கிறார்கள் என்றால் மற்றவரை கவரும் அவரது நடிப்பு என சொல்லலாம்.

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் “கமல்ஹாசன்” ஒரு சிறு குழந்தையாக இவர் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில், அபூர்வராங்கள் மற்றும் பட்டாம்பூச்சி போன்ற படங்கள் இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். இவரது நடிப்பை விட அவர்க்கு கொடுக்கப்படும் கதாபாத்திரமும், போடும் வேஷங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக அவ்வை சண்முகி, தசஅவதாரம் போன்ற படங்கள். இவருடன் எந்த நடிகை நடித்தாலும் அவர் உச்சம் தொட்டு விடுவார் என்று இவருடன் நடித்த பல நடிகர்கள் கூறுவார்கள்.

இந்நிலையில் தற்போது திரையில் வெளியாகி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் “தக்-லைப்”. மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் அபிராமி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தைப்பற்றி ஒரு சில தவறான விமர்சனங்கள் எழுந்தாலும்., மறுபக்கம் தவறான கமல்ஹாசன் மற்றும் சிம்புவிற்காக படத்தை பார்க்கும் கூட்டம் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் இப்படத்தை பார்த்த நடிகை “மிருணாள் தாகூர்”. தன் மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“இனிய இரு மலர்கள்” என்ற ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, “சீதா ராமம், ஹா நானா” போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த “மிருணாள் தாகூர்” ஒருமுறையாவது உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறு வயதில் இருந்தே தான் ஒரு கமல் ரசிகை என்றும், அவரை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில படங்களுக்காக கமல்ஹாசன் ஜனாதிபதியின் கையால் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இவர், தமிழ் மற்றும் மலையாளம் , தெலுங்கு , இந்தி , கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பிற மொழிகளில் 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News