கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை மாவட்டத்தில் அகழாய்வு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 10ம் ஆண்டு அகழாய்வு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதில்., செப்புகள், சுவடுகள், தொல்லியல் பொருட்கள், மற்றும் ஆதிகாலப் பொருட்கள் பல கண்டறியப்பட்டு ஆராய்ச்சி மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது..
இந்நிலையில் பல்வேறு கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா இன்று திடீரென நொய்டாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழாய்வு பணிகளை உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சென்னை பணியிடை மாற்றம் செய்ய ஒன்றிய அரசு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் மீண்டும் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.