முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸை ரசித்த கணவன்.. பிறப்புறுப்பை அறுத்த 2-வது மனைவி..

ஆந்திர பிரேதேச மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள முப்பலா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் பாபு. இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 ஆண்டுகளுக்கு முன்பு, விவாகரத்து செய்துக் கொண்டனர். இதையடுத்து, வீரம்மா என்ற பெண்ணை, ஆனந்த் பாபு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று, தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ்களை, ஆனந்த் பாபு பார்த்துள்ளார்.

இதனை கவனித்த 2-வது மனைவி, கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த வீரம்மா, கணவரின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வீரம்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News