தற்போது நாட்டையே உருக்குலைத்துள்ள ஒரு விபத்து என்றால் அது அகமாதாபாத் விமான விபத்து. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. இதில் 242 பயணித்த நிலையில் இதுவரையில் 170 பேர் உயிர் இழந்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்துக்குறித்து பயணி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்..
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் லண்டன் நோக்கி சென்றது. அதில் 242 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதன் உதறி பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது என்று சொல்லலாம்.
https://twitter.com/i/status/1933114664923148455
இதில் பயணித்த ஆகாஷ் என்ற வாலிபர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “AMD-யிலிருந்து புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக, நான் அந்த ஏறிவிட்டேன். அதில் பல அசாதாரணமான விஷயங்களை நான் கவனித்தேன்.. ஆனால் அதை பற்றி யாரும் கவனிக்கவில்லை. பின்னர் நான், இதை வீடியோவாக எடுத்து airindiaவை ட்வீட் செய்து சமூக வலைதங்களில் வீடியோ பதிவிட்டிருந்தேன். அதை அவர்கள் முன்னதாக பார்த்திருந்தால் கூட இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனிடையே விமானம் கட்டுப்பாடின்றி இருப்பதாக கன்ட்ரோல் ரூமுக்கும் தகவல் வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் பைலட் இதை கேட்டு அவற்றை சரி செய்ய முடிவதற்குள் விபத்து நேர்ந்ததாக ஏர் இந்தியா தயாரிப்பில் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.