விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாம் நினைத்த காரியங்களை நிறைவேறிட பூஜைகள் செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜி, நேற்று இக்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு நள்ளிரவில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திடவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து, ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…