திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்தை அப்பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனராஜா (அப்பெண்ணின் தந்தை) கூலிப்படை மூலம் தனுஷின் தம்பியான சிறுவனை கடத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், சிறுவனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழக கூடுதல் காவல் துறைத் தலைவர் எச்.எம். ஜெயராம், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் போலீசாரின் சந்தேக நபராக இருப்பதால் இவ்வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இந்த கடத்தல் வழக்கில் உடைந்தையாக இருந்த ஏ.டி.ஜி.பி ஜெயராமை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. குற்றவழக்கில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் அவர்கள் பணி நீக்கம் செயல்படுவார்கள். அதன்படி ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதற்கு தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது அதில், ஜெயராமின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற போவதில்லை என்றும், இந்த கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதனை திரும்ப பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது..
மேலும் ஜெயராமின் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும் என்றும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இடைநீக்கத்தை ரத்து செய்ய போவதில்லை எனக்கூறி உரிய ஆவணங்களை தமிழக அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் ஏடிஜிபி ஜெயராம் தொடர்புடைய இந்த கடத்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது..