புதிய கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா…!! இயக்குனர் பூரி ஜெகன்நாத் சொன்ன சீக்ரெட்..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பான் இந்தியா படத்தில் நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளதாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் சார்மி கார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனரான “பூரி ஜெகன்நாத்” கடந்த 2000ம் ஆண்டு வெளியான radri என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். அதன் பின்னர் என் நிரஞ்சன், நேனுனா ராட்சசி, லிகர், மற்றும் ஸ்மார்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் பான் இந்தியா படத்தை இயக்கவுள்ளார். தற்போது இப்படத்தில் நடிகை சம்யுக்தா-வையும் இணைந்திருப்பதாக சில பிரத்யேக அறிவிப்புகள் கிடைத்துள்ளது.

இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் அண்மையில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது ‘தென்னிந்திய சினிமாவின் வசீகரம் ‘என போற்றப்படும் திறமையான நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடிகை சம்யுக்தா – இந்த படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதன் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது.

பான் இந்திய அளவிலான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியிடப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த படம் இருக்கும் என நம்பப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News