சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி. அந்த காலங்களில் இவர் சில குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரது பாடல்கள் அந்த கிராமங்களில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒலித்து என சொல்லலாம்.

கொல்லங்குடி கருப்பாயி விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் இவர்., தனது பருவ காலங்களில் நாற்று நடும் முன் கிராமிய பாடல்களை பாடி தான் துவக்கி வைப்பாராம். இவரது பாடல்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமங்களில் ஒலித்து கொண்டிருக்க, இவை நடிகர் பாண்டியராஜன் காதிற்கு சென்றுள்ளது. அவரது பாடல்களை கேட்ட நடிகர் பாண்டியராஜன்., ஆண்பாவம், ஆசைநூறு, மற்றும் கோபாலா கோபாலா உள்ளிட்ட படங்களில் நடிக்க வைத்துள்ளார்.

பின்னர் இவரது கணவர் மற்றும் மகள் விபத்தில் உயிர் இழக்கவே மனமுடைந்த கருப்பாயி சினிமாவில் இருந்து விலகி மீண்டும்., விவசாய வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இன்று காலமானார். நாட்புறப்பாடல்களின் அடையாளமாக காணப்பட்ட கருப்பாயிக்கு கடந்த 1993ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.