நயன்தாரா அதை பண்ண மாட்டேன் சொல்லிட்டாங்க..!! யோகிபாபு ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த இவருக்கு முதல் படமே நல்ல ஹிட் கொடுத்தது. அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

ஏற்றம் இருந்தாலும் இறக்கும் இருக்கத்தான் செய்யும்., என்பது போல பில்லா-2, வில்லு, குசேலன் உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தது குறிப்பாக சிம்புவுடன் இவர் சேர்ந்து நடித்த “வல்லவன்” படத்தில் இவருக்கு மார்க்கெட் போய் விட்டது என சொல்லலாம்.. கிளாமர் லுக்கில் நடித்தால் பெரிய இடத்திற்கு சென்று விடலாம் என இவர் நினைத்தாரோ என்னவோ இந்த படங்கள் மட்டும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

அதன் பின்னர்., ராஜா ராணி படத்தில் இவர் கொடுத்த கம்பேக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.. இதனை தொடர்ந்து பிகில், நானும் ரவுடி தான், விசுவாசம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி இட்லீ கடை, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா குறித்து யோகிபாபு கூறியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, யோகிபாபுடன் சேர்ந்து கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்திருந்தார்.

யோகிபாபு காமெடி நடிகராக வளம் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில்., முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் தான் “கோலமாவு கோகிலா”. இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், சில காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என இயக்குனர் நெல்சன் கூறிய போது மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், ஒரு காட்சியில் யோகிபாபுவின் முகத்தில் நயன்தாராவை கால் வைக்க வேண்டிய காட்சி எடுக்க இருந்த போது, அதற்கு நயன் மறுப்பு தெரிவித்துள்ளார். யோகிபாபு சம்மதித்த நிலையிலும் நயன் அதற்கு கடைசி வரை சம்மதிக்கவில்லை என யோகிபாபு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News