அதிமுக ஐடி-விங் முன்னாள் நிர்வாகி பிரசாத், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் கடந்த வாரம் தனியார் மதுபான பார் ஒன்றில் தகாரில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடைம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள்கள் வாங்கி பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை அன்று கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் மீது 4 பிரவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பிரசாத் மற்றும் பிரதீப்குமாருக்கு நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பாலானது. இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கிருஷ்ணாவிடம் விசாரணை செய்ய முற்பட்டபோது அவர் கேரளமாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்தது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்த கேரளாவிற்கு செல்ல திட்ட மிட்ட நிலையில்., நேற்று தனது வழக்கறிஞசருடன் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். மேலும் தான் இதயநோயாலும் இரைப்பை பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் போதைப்பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்தது..
இருப்பினும் ஸ்ரீகாந்துடன் தொடர்பில் உள்ள நடிகர்., நடிகையர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்..