கொகைன் போதைப்பொருள் விவகாரம்..!! நடிகர் கிருஷ்ணா கொடுத்த விளக்கம்..!!

அதிமுக ஐடி-விங் முன்னாள் நிர்வாகி பிரசாத், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் கடந்த வாரம் தனியார் மதுபான பார் ஒன்றில் தகாரில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடைம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள்கள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை அன்று கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை விசாரணை செய்ததில் நடிகர் கிருஷ்ணாவிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணா கேரளமாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்தத நிலையில் அவரிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீசார் கேரளா சென்றனர். ஆனால் அங்கு அவரது போன் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தனது வழக்கறிஞசருடன் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். மேலும் தான் இதயநோயாலும் இரைப்பை பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் போதைப்பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்தது..

இதனிடையே சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை தொடர்ந்து. தற்போது கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரும் ட்ரக் டீலருமான கெவின் ஆகியோர் நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஸ்ரீகாந்துடன் கிருஷ்ணா சில (Code Word ) பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியதன் அடிப்படையில் ஜூன் 26ம் தேதி கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில்., தான் போதைப்பொருள்கள் பயன்படுத்தவில்லை என தெரிந்தும் ஆதாயம் இன்றி போலீசார் தன்னை கைது செய்துள்ளதாகவும்., தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பழைய வாட்ஸ் அப் ஆதரங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொள்வதாக குறிப்பிட்டு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News