இனி ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் இது கட்டாயம்..!! ஜூலை 1ம் தேதி அமல்..!!

தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கப்பட வேண்டுமென ஐஆர்சிடிசி கட்டாயமாக்கியுள்ளது. இந்த அதிரடி மாற்றம் குறித்து பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வரும் நிலையில் சில முக்கிய தகவல்கள் குறித்து ஐஆர்டிசிடிசி விளக்கம் அளித்துள்ளது.

இரயில் பயணத்தில் முன்னதாகவே டிக்கெட் புக்கிங் செய்துகொண்டு பயணிப்பதை தட்கல் புக்கிங் என்பார்கள். இந்த இணையத்தளமானது இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதள வாயிலாக செயல்பட்டு வருகிறது.

தட்கல் புக்கிங் சிக்கல் :

இப்படி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில் பயணிகளின் விவரங்களை குறிப்பிட்டு அவற்றை புக்கிங் செய்து முடிப்பதற்குள்ளே பலரும் புக்கிங் செய்து விடுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. அப்படியே புக்கிங் செய்தாலும் பணம் செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும்., சர்வர் முடக்கம், தொழில் நுட்பக்கோளாறு உட்பட பல்வேறு சிக்கல்கள் இருந்துள்ளது.

இதனிடையே ஏஜெண்டுகள் சிலர் டிக்கெட் புக்கிங் செய்து விட்டு போலி பெயரில் பயனாளர்கள் அதிக பணம் கொடுத்து பயணம் செய்து வந்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது..

அதன் பேரில் போலி கணக்குகளை துவக்கி, டிக்கெட் புக்கிங்கில் மோசடி செய்த 3.5 கோடி போலி கணக்குகளை இந்தியன் ரயில்வே முடக்கியது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தட்கல் டிக்கெட் புக்கிங்கில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. இதன் நடைமுறையானது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதேபோல் இதற்கு முன்னர் வரை தட்கல் டிக்கெட் புக்கிங் செய்துள்ள பயனாளர்கள் பலருக்கும் இ-மெயில் மூலம் இந்தியன் இரயில்வே குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதில் “ஐஆர்சிடிசி இணையதள கணக்கு வைத்துள்ள பயனர்கள், தங்களது பயனர் கணக்கு ( User Name ) மற்றும் கடவுஎண் (password) உள்ளிட்டு “மை அக்கவுன்ட்” என்ற பக்கத்தில் செல்ல வேண்டும். பின்னர் பயனாளரை அங்கீகரிக்கத்து (Authenticate User) யை செலக்ட் செய்து ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் ஆதாரில் பதிவிட்டுள்ள எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவிட வேண்டும். என இவ்வாறே குறிப்பிட்டுள்ளது..

RELATED ARTICLES

Recent News