9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்., மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜூன் 26 ம் தேதி வரை வடமேற்கு இந்தியா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கொங்கன்-கோவா உள்ளிட்ட பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News