அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்…சிக்கிக்கொண்ட ரயில் பயணிகள்

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக ரயிலில் 800-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், 300 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

500 பேர் ரயில் பெட்டியிலேயே உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். தண்டவாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இரவில் இருந்து ரயில் நகர முடியாமல் தாதன்குளம் அருகே நின்று கொண்டிருக்கிறது.

RELATED ARTICLES

Recent News