ஒரு மாத பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற தாய்!

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4-வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கலியபெருமாள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.. தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் போலீசார் அங்கு இருக்கக்கூடிய சிசிடிவிக்காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது இளம்பெண் ஒருவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News