சென்னை மாநகர பேருந்தில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில் பேருந்து நடத்துநர் கீழே விழுந்து உயிரிழந்தனார்.
சென்னை அண்ணா ஆர்ச் அருகே பயணிக்கு மாநகர பேருந்து நடத்துநருக்கு டிக்கெட் வாங்குவதில் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் பயணி பேருந்து நடத்துநரை பேருந்தில் இருந்து தள்ளிய நிலையில் கீழே விழுந்ததில் மாநகர பேருந்து நடத்துனர் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார் நடத்துநர் ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் மற்ற மாநகர பேருந்துகள் அந்த பகுதியில் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணையில் டிக்கெட் எடுப்பதில் பிரச்சணை ஏற்பட்டதால் பயணி கோவிந்தன் (65) என்பவருக்கும் நடத்துனர் ஜெகனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது.