மோடிக்கு கோயில் கட்டி சிறப்பு வழிபாடு செய்யும் விவசாயி..!!

திருச்சி மாவட்டம் ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் (50). பிரதமர் மோடிக்கு கோயில் ஒன்றைக் கட்டி நாள் தவறாமல் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.

பிரதமர் மோடியின் திட்டங்களால் பலன் பெற்றதன் காரணமாகவே இக்கோயில் கட்டியதாக விவசாயி சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சங்கர் கூறியதாவது: என்னுடைய சொந்த நிலத்தில், கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக பிரதமர் மோடிக்கு கோயில் கட்டினேன். சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்தமாக செலவு செய்து ஆறு மாதங்களில் கோயில் கட்டினேன்.

பிரதமர் மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன். மோடி மூன்றாவது முறை பிரதமாக வேண்டும், என்று பழநிமலை முருகனிடம் வேண்டுதல் வைத்தேன். அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த உடன், தங்கத் தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன்.

பிரதமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. 2030ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News