சாமத்தியமாக 4 திருமணம் செய்த மாற்றுத்திறனாளி..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பெண் ரமணி (வயது 32) இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர் பெரியோர்களால் சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழும் பொழுது செந்தில் நாதனின் தொலைபேசியை ரமணி பார்த்துள்ளார். அதில் செந்தில்நாதன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமணி., அவரை கண்டித்துள்ளார்.

ஆனால் அதனை பொருட் படுத்தாத செந்தில்நாதன் ரமணியை பிரிந்து விடலாம் என தீர்மானித்து., அவருடைய நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அந்தப் பெண் ஏற்கனவே தன்னுடைய தோழி என மனைவி ரமணியிடம் பலமுறை அறிமுகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள்., செந்தில் நாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்போது கைகளப்பான நிலையில் செந்தில் நாதனின் தோழி ரேகா ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரமணி உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன் பின்னரே செந்தில்நாதன், பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், சிறு வயதில் இருந்தே பல பெண்களை ஏமாற்றி வருகிறார் என்பது தெரியவந்தது.. மேலும் விசாரணையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆனதாகவும் இரண்டாவது திருமணம் 2015 இல் நடைபெற்று அந்த பெண்ணையும் ஏமாற்றி மூன்றாவதாக 2018-ல் ரமணி திருமணம் செய்து கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைக்காக அலுவலகத்திற்கு சென்று சண்டை போட்டதாகவும் காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு இருந்தால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்க அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய குழந்தையை செந்தில் நாதனிடமிருந்து பெற்று தர வேண்டும் எனவும் பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி சுற்றி தெரியும் செந்தில் நாதன் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளார்..

RELATED ARTICLES

Recent News