லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து கைதி 2, விக்ரம் 2 படங்களை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் தனக்கு ஒரு கதை கூறியதாகவும் அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் படங்களை பார்த்து அவரின் பட வாய்ப்பை தவிர்ந்து விட்டு உள்ளோமே என வருந்தியது உண்டு என ஜெயம் ரவி கூறியுள்ளார்.