நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நந்தமுரி பாலகிருஷ்ணா பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு கடுமையான மனச்சோர்வு இருப்பதையும், அதை சமாளிப்பது அவருக்கு எவ்வளவு கடினமாக இருந்ததையும் வெளிப்படுத்தினார்.
என்னிடம் மனச்சோர்வு அதிகம் இருந்தன. அதனை எதிர்த்து நான் போராடினேன். 17 வயதில், தேர்வுகளின் அழுத்தம் காரணமாக என் மனச்சோர்வு அதிகரித்தது.

என் மூத்த சகோதரனின் (சிரஞ்சீவி) உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் என் உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டிருந்தேன். எனது மூத்த சகோதரர் நாகபாபு மற்றும் மைத்துனர் சுரேகா ஆகியோர் தன்னை காப்பாற்றினர் என அவர் பேசினார். மேலும் அவர் பேசுகையில் புத்தகங்களைப் படிப்பது, கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் மற்றும் பிற முயற்சிகளில் ஆறுதல் கண்டேன் என கூறினார்.