திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 60) நேற்று மாலை பொன்னம்பட்டி அருகே உள்ள சடவேலாம்பட்டி சாலையில் அவர் வளர்த்து வரும் இரண்டு ஆடுகளை மேய்க்க சென்றுள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2பேர், அவரிடம் பேச்சுக்கொடுத்த படி அருகில் வந்துள்ளனர்.. அப்போது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மூதாட்டி துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் தடயங்கள் சேகரித்தும் சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை அடையாளங்களாக வைத்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்