அரசு பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலி சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன் கிழவன் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24) இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22) இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூர்பாலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரியும் பூவன் கிழவன் பட்டியில் தங்கி விட்டு இன்று காலை வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு பணிக்கு சென்றுள்ளனர். செல்லும் பொழுது தனது இரு சக்கர வாகனத்திற்கு கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பகுதியில் சாலை கடக்க வேண்டும்

திண்டுக்கல் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் இருவரையும் மீட்டு 108 அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து சாணார்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூறு பாலை பணிக்காக சென்ற இருவர் அரசு பேருந்து மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News