சென்னையில் ஒரு சில கல்லூரி மாணவர்களால் பொதுமக்களுக்கு அதிக இடையூரு ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதிலும் சில மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தது.
அந்த வகையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்., மீது பொதுமக்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பேருந்தின் மீது எறியும்., மற்றவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக கூறினர்.
தற்போது சென்னை பூங்கா இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் இரயில் தடையம் வழியே ஒவ்வொரு இரயில் நிறுத்தத்தில் மாணவர்கள் இரயிலின் கூரை மீது ஆர்ப்பாட்டம் செய்வதாகவும்., சில மாணவர்கள் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் இரயில்வே காவல்துறையினர் மாணவர்களை கையும் களவுமாக பிடித்து அறிவுரை கூறியுள்ளனர்.. ஆனா நாங்க எல்லாம் சொல்லு பேச்சு கேட்காத மாணவர்கள் என சொல்லும்படி அந்த மாணவர்கள் செயல் இருந்ததால் கடுப்பான இரயில்வே போலீசார்., நுங்கம் காவலர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர்..
பின்னர் அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்டித்துள்ளனர். இதுவரையில் மட்டும் 158 மாணவர்கள் மீது 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
என் பிள்ளை படித்து பட்டம் வாங்கி, வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக்கொள்வான் என நினைக்கும் பெற்றோரின் கனவை பொசுக்கும் இந்த 2கே மாணவர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..