சென்னையில் மெட்ரோ இரயில் சேவை தொடங்கி இன்று 10 ஆண்டுகள் நிறைவைடைந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முதலாக சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் மார்கத்திற்கே மெட்ரோ சேவையானது இயக்கப்பட்டது. தற்போது, சென்னை சென்ட்ரல் டூ விமான நிலையம், விம்கோநகர் என பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் பூந்தமல்லி, போரூர், குன்றத்தூர் மற்றும் கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் மெட்ரோ திட்டம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னையில் எந்த பகுதிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்றாலும் மெட்ரோ இரயில் சேவை மூலம் எளிதில் சென்று விட முடியும்.. என்பதால் பல லட்சம் மக்கள் நாள்தோறும் மெட்ரோ சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.. கடந்த 10 வருடத்தில் மட்டும் 40 கோடி பேர் பயணம் செய்துள்ளாதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று மெட்ரோவில் வேலை வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில்., அதற்கு பாலிடெக்னீக் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்குமாறு கூறியிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல லட்சம் பாலிடெக்னீக் மாணவர்கள் அந்த வேலைக்காக விண்ணப்பித்து வருகின்றனர்..