தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா தம்பதியினர். கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் இதுவே அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம் என சொல்லலாம்..

அதிலும் இந்த படத்தில் வரும் பாடல்கள் நல்ல ஹிட் ஆனது.. குறிப்பாக இரவாக பகலா குளிரா வெயிலா என்ற பாடல்.
நிலவின் முதுகும் பெண்ணின்
மனதும் என்றும் ரகசியம் தானா
கனவிலேனும் சொல்லடி
பெண்ணே காதல் நிஜம் தானா..

இவர்கள் நடிப்பும்., இவர்கள் ஜோடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவே அடுத்தடுத்து இருவரும் சேர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்தனர். உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள். அதிலும் ஒரு சில படங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோடு இன்று வரை அனைவரும் ரசிக்கும் படமாகவும் அமைந்துள்ளது.

பின்னர் காக்க காக்க படம் நடித்து கொண்டிருந்த சமயத்தில் இருந்தே இருவரும் காதலித்து சில்லுனு ஒரு காதல் படம் வெளியான பின்னர், கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் இணைந்த ஜோதிகா படங்கள் ஏதும் நடிக்காமல் இருந்துவந்தார்.

இவங்க மீண்டும் படம் நடிக்க வரமாட்டாங்களா..? என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில் பல வருடங்களுக்கு பின் 36 வயதினிலே என்ற படத்தில் கம் பேக் கொடுத்தார். அந்த படம் வெற்றியடையவே ராட்சசி, ஜாக்பாட், மகளிர் மட்டும், ஜான்சி, மற்றும் உடன்பிறப்பு போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்திற்கு பின் அவர் தேர்ந்தெடுத்த அனைத்து படங்களும் மாறுபட்ட கதைக்களம் என சொல்லலாம்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் தன்னுடை காதல் கணவர் சூர்யாவுடன் தான் பிறந்த இடமான மும்பைக்கே சென்றார். அவர்கள் திடீரென அங்கு செல்ல சூர்யாவின் தந்தை சிவக்குமார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில்., தன்னுடைய மனைவியின் ஆசைக்காகவும் எனக்காக அவர் செய்த தியாகங்களுக்கு ஈடு செய்யும் விதமாக மும்பை செல்கிறோம் என சூர்யா கூறியிருந்தார்.

இந்நிலையில் சூர்யா, ஜோதிகா இருவரும் கடற்கரையில் சந்தோஷமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..