மேற்குதிசை வேக மாறுபட்டு காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும்., காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஜூலை 3ம் தேதி இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது..
சென்னையை பொறுத்தவரையில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.