ஆரம்பம் முதல் முடிவு வரை மார்கன் படத்தில் அது சூப்பர்..!! படத்தின் குட்டி ஸ்டோரி..!!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மார்கன் படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி படம் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விடும். அப்படி இன்று வெளியாகியுள்ள மார்கன் படம் வரவேற்பை பெற்றுள்ளதா அல்லது தோல்வி அடைந்து விட்டதா என இந்த பதிவில் பார்க்கலாம்…

சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் தான் விஜய் ஆண்டனி. படம் ஹிட் ஆகலைனாலும் இவருடைய பாடல்கள் நல்ல ஹிட் ஆனது., இதன் தொடர்ச்சியாக நினைத்தாலே இனிக்கும், காதலில் விழுந்தேன், நான் அவன் இல்லை, வேட்டைக்காரன் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய பாடல்களும் சரி எப்போது ஒரு வைப் ஆகவே இருக்கும்.

இசையால் மட்டும் ரசிகர்களை ஈர்த்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து படம் நடிச்சுட்டு வராரு.. குறிப்பாக பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் நல்ல ஹிட் கொடுத்த படங்கள் என சொல்லலாம்..

அப்படி தான் மார்கன் படமும் நல்ல ஹிட் கொடுக்கும் படமாக அமைந்திருக்கு. போலிஸ் ஆபிரசராக இருக்கும் விஜய் ஆண்டனி, விஷ ஊசியால் பாதிப்பட்டு காவல்துறையில் இருந்து ஓய்பு பெறுகிறார். அதே சமயத்தில் இன்னொரு பெண்ணுக்கு விஷ ஊசியால் பாதிக்கப்பட்டு கொலை செய்யப்படுறாங்க. இந்த கேஸ் விசாரணை செய்ய அபிசியல் ஆபிசராக விஜய் ஆண்டனி சென்னைக்கு வர, தமிழறிவு என்ற ஒருவரை சந்தேகத்து விசாரணையை தொடங்குறாரு.,

சில காட்சிகள் தமிழறிவுடன் ஒத்து போக அவர்தான் குற்றவாளி என விஜய் ஆண்டனி நினைக்க அது அவருக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. பின் தமிழறிவுடன் சேர்ந்து உண்மை குற்றவாளியை தேடுறாரு. இந்த கொலையை செய்யும் அந்த குற்றவாளி வில்லன் யாரு..? அதற்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை. சிறந்த க்ரைம், திரில்லர் படமாக மார்கன் படம் அமைந்திருப்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.. ஆரம்பம் முதல் முடிவு வரை விசாரணை நோக்கி படம் செல்வதால் சுவாரசியமாக உள்ள ஒரு படம் என்று சொல்லலாம்.

RELATED ARTICLES

Recent News