இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.
சீனா ஹாங்காய் கிங்டோவில் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உட்பட ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட 10 நாடுகளை சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்களித்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஒரு சில நாடுகள் உதவி வரும் நிலையில் அந்த நாடுகள் மீது எஸ்ஐஓ விசாரணை நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தான் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கூட்டறிக்கையில் குறிப்பிடாததால் கையெழுத்திட மறுத்து விட்டதாக ராஜ்நாத் சிங் தரப்பில் சொல்லப்படுகிறது.