பிரபல கோவிலில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள்..!! போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் அர்ச்சகர்கள் ஆபாசமாக ஆடும் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதில் ஒரு அர்ச்சகர் ஆபாசமாக ஆடுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 3 அர்ச்சகர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News