நடிகர் பொன்னம்பலத்தின் உருக்கமான ஆடியோ..!! அந்த நடிகர்கள் பெயரை மட்டும் குறிப்பிட காரணம்..?

சினிமாவில் ஒரு ஸ்டென்ட்மேனாக அறிமுகமானவர் பொன்னம்பலம்., பின்னர் அபூர்வசகோதரர்கள், மைக்கல், மதன், காம ராஜன் படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு நாட்டாமை படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை விட அப்படத்தில் அவரது வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 90ஸ் களில் வெளிவந்த பல படங்களில் இவர் வில்லனாகவே வாழ்ந்து இருப்பார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக படம் நடிக்காமல் இருந்த இவர் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு., ஆசன வாய்ப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அப்போ தனது உடல் நிலை மிகவும் மோச மடைந்து இருப்பதாகவும்., பண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தாரு.

இந்நிலையில் அவர் மீண்டும் உடல்நிலை பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மீண்டும் ஒரு ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல்முறை உடல்நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்ததகாவும்., பண உதவி கேட்டு ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில் நடிகர்கள் கமல், சரத்குமார், தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், நிழல்கள் ரவி, சிம்பு மற்றும் ரவிமோகன் ஆகிய நடிகர்கள் தனக்கு உதவியதாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

எப்போதும், திரையில் மிரட்டல் வில்லனாகவே பார்த்த ரசிகர்களுக்கு அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

RELATED ARTICLES

Recent News