நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது சொந்த கிராமமான திருமங்கலம் அரசு பட்டியில் தாய்,தந்தை, மனைவிக்காக கட்டப்பட்ட நினைவு இல்லத்தில் புதிதாக நூலகம் திறந்து தான் சிறு வயதில் படித்த பள்ளிக்கும் பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் சிறப்பு விருந்தினராக KPY பாலா, ராமர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த அரசுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் பட்டிமன்ற பேச்சாளர் மதுரை முத்து இவர் மறைந்த அவரது தாய்,தந்தை மற்றும் மனைவியின் நினைவாக அவ்வப்போது பண்டிகை திருநாட்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆதரவற்றோருக்கு செய்து வந்தார்.
இந்நிலையில் தாய் தந்தை மற்றும் மனைவியின் நினைவாக அவர்களுக்காக தனது சொந்த கிராமமான திருமங்கலம் அரசப்பட்டியில் அவரது பூர்வீக இடத்தில் மூவருக்கும் கோவில் கட்ட வேண்டும் என்று அவரது நீண்ட நாள் எண்ணமாக இருந்தது அதன் தொடர்ச்சியாக மதுரை முத்து தனது கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் தாய் தந்தையார்க்கு மார்பளவு சிலை வைத்து ராமசாமி முத்து இருளாகி லேகா என்ற நினைவாலயம் கட்டினார்.
இக்கோவில் திறப்பு விழாவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வருகை தந்தனர் தொடர்ந்து இக்கோவில் மூலம் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை தனது சொந்த கிராம மக்களுக்கு செய்ய இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் இன்று கோவில் கட்டிய பின் அவர்களுக்கு பிறந்தநாள் நினைவு வரும்போது இங்கே நலத்திட்ட உதவிகள் செய்து வந்துள்ளார். தொடர்ந்து இன்று மறுபூஜை வைத்து தனது குடும்பத்தினருக்காக எழுப்பப்பட்ட நினைவு இல்லத்தில் புதிய நூலகம் மற்றும் அரசப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மின்விசிறி, டேபிள், சேர், ட்ரை சைக்கிள், மரக்கன்றுகள் வழங்கினார்.
மேலும் 50 பள்ளி மாணவர்களுக்கு உடைகளும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கே பி ஒய் பாலா மற்றும் நடிகர் ராமர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.