நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் விவகாரம்..!! நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பார் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் அடிதடி தகராறில் ஈடுபட்ட சிலரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி என்பது பின்னரே தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது., அதிமுக ஐ.டி.விங் நிர்வாகியான பிரசாத் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதும். நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், பிரசாத் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் போதைப்பொருள்களை யாரிடம் இருந்து வாங்கினார், யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பிரதீப் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவர் இயக்கி வரும் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்ததாகவும்., படத்திற்காக வைக்கப்பட்ட பார்ட்டியில் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம்., நேற்று காலை துணை கமிஷ்னர் ஜெயசந்திரன் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் கொக்கைன் பயன்படுத்தியது உறுதியானது. ஆதரங்களின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்., 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News