சேலத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு 6 பேர் அதிரடி கைது…!

சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொடர்பாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் செவ்வாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோகன்ராஜ் செல்போன் ஆய்வு செய்தபோது பச்சிளம் குழந்தையினுடைய புகைப்படங்கள் அதிக அளவில் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் குழந்தைகள் படம் செல்போனில் உள்ளது குறித்து விசாரணையே மேலும் துரிதப்படுத்தினர் அப்பொழுது மோகன்ராஜ் பச்சிலை குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது

கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்ராஜ் ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து சேலத்தில் விற்றதும் தெரியவந்தது இந்த குழந்தை விற்பனை செய்வதற்கு மோகன் ராஜன் மனைவி நாகசுதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

குழந்தை விற்பனைக்கு உறுதுணையாக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன் பானு, பத்மாவதி ஸ்ரீதேவி ஆகியோர் சேர்ந்து மோகன்ராஜ் மூலம் மூன்று குழந்தை பெற்று இருப்பதும் மூன்று ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்த விசாரணையை புனிதப்படுத்திய செவ்வாபேட்டை போல தனிப்படை அமைத்து குழந்தை வாங்குவது போல் ஜனார்த்தன் என்பவரிடம் விற்பனைக்கு குழந்தை இருந்தால் கூறுமாறு கேட்டுள்ளனர்.

அப்பொழுது ஜனார்த்தனன் குழந்தை இருப்பதாகவும் 4 லட்சம் போலீசாரடம் பணம் கேட்டதாகவும் தெரிகிறது. அதன் அடிப்படையில் சேலம் மேட்டுப்பட்டி அருகே ஜனார்த்தனன் குழந்தையை விற்பனை செய்வதற்காக வரும்பொழுது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தார் விற்பனைக்காக குழந்தையை எடுத்து வருவதாக நட்சத்திரம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை பெரிதப்படுத்த அடிப்படையில்.

நேற்று மோகன்ராஜ், நாகசுதா, பர்வீன் பானு, பத்மாவதி, ஜனார்த்தனன் ஸ்ரீதேவி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் திருப்பூர் கோவை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் குழந்தை இல்லாத தொழிலதிபர்களுக்கு குழந்தைகளை ஏழை எளியவர்களிடமிருந்து சட்ட விரோதமாக வாங்கி பல லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது..

RELATED ARTICLES

Recent News