ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சி தொண்டர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் ரெண்டபல்லா கிராமத்திற்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை காண்பதற்காக அவர் வரும் பாதையில்., கட்சி நிர்வாகிகள் பலர் மலர் தூவி வரவேற்றனர்.
அப்போது அவரது கட்சி தொண்டர் செல்லி சிங்கையா உட்பட சிலர் ஜெகன்மோகன் ரெட்டியின் காரின் மீது ஏற முற்பட்டுள்ளனர். அப்போது செல்லி சிங்கையா கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை யாரும் காணாத நிலையில் ஓட்டுநர் காரை இயக்க செல்லி சிங்கையா கார் டயரில் சிக்கி உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குண்டூர் போலீசார் ஜெகன் மோகன் ரெட்டி, உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி, முன்னாள் அமைச்சர் சுப்பா ரெட்டி, விடதலா ரஜினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேர்னி நானி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஓட்டுநரான ரமண ரெட்டியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.