கிரிவலப் பாதையில் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதி..!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்., போளூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மழை நீர் வெளியேற வழியில்லாமல் பல இடங்களில் மழை நீர் கழிவுநீர் கலந்து தெருக்களிலும் சாலைகளிலும் தேங்கி உள்ளது. இதனால் துற்நாற்றம்‌ வீசுவதோடு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இனிவரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் முறையான மழை நீர் கழிவுநீர் நீர் வெளியேற‌வழி வகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கடந்த அரை மணி நேரமாக பெய்த மழையில் மரம் மற்றும் மின்விளக்கு சாய்ந்துள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News