நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் “விஜய்..”. இப்படத்தை இவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். ஆனால் இப்படம் தோல்வியை சந்தித்தது, அதன் பின்னர் செந்தூர பாண்டி என்ற படத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு தம்பியாக நடித்தார். ஆனால் அந்த படமும் இவருக்கு வரவேற்பை பெற்றுக்கொடுத்ததே தவிர மக்கள் மனதில் அவரால் அப்போது இடம் பிடிக்க முடியவில்லை.. அதே சமயம் பல தொடர் விமர்சனங்களும் எழுந்தது.
குறிப்பாக பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று “தகர டப்பா போல் உள்ளவர்கள் படம் நடிக்க வரலாமா..? என எழுதியிருந்தனர்., தோல்வியும் விம்சர்சனங்களும் எனது பலவீனம் அல்ல., அதையே நான் மாற்றி சரித்திரம் படைப்பேன் என்ற உறுதியோடு அவர் படம் நடிக்க ஆரம்பித்தார்..

கடந்த 1996ம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “பூவே உனக்காக” இப்படம் திரையில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் லவ்டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனம் துள்ளும், மற்றும் பிரியமானவளே உள்ளிட்ட பல்வேறு காதல் படங்களை கொடுத்தார்.

நான் காதல் படங்கள் மட்டுமல்ல ஆக்ஷ்ன் ஈரோவாகவும் களம் இறங்குவேன் என திருமலை., கில்லி, போக்கிரி, துப்பாக்கி, தலைவா, கத்தி, தெறி, மெர்சல், மற்றும் மாஸ்டர், லியோ போன்ற பல ஆக்ஷன் படங்களையும் கொடுத்துள்ளார்.,

மேலும் நண்பர்களுக்காக., ப்ரண்ட்ஸ், நண்பன் போன்ற படங்களும், தங்கை களுக்காக திருப்பாச்சி, சிவகாசி, மற்றும் வேலாயுதம் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

குறிப்பாக தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி மற்றும் சச்சின் போன்ற படங்கள் புது படங்களுக்கு இணையாக நல்ல ஹிட் கொடுத்தது.. ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய் ஆசைப்பட்டதை போலவே தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இவர் உள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு என்று உள்ள ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தற்போது அரசியலிலும் இவர் கால் பதித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி., சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இவர் சந்தித்த இன்னல்களை போலவே அரசியலிலும் சந்தித்து கொண்டிருக்கிறார். ஆனால் அதே சமயம் இவரது தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும்., தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான “விஜய்” இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..