நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த நடிகை கனகா..!! காவல் நிலையம் சென்றது ஏன்..?

பழம்பெரும் நடிகையான கனகா நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த நிலையில்., தற்போது காவல நிலையம் சென்றிருப்பதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்

பிரபல நடிகை தேவிகாவின் மகளான நடிகை கனகா., கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் ஆர்வம் இல்லையாம். தாயுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது., கங்கை அமரன் இவரை பார்த்து உங்களது மகளை சினிமாவிற்கு அறிமுகம் செய்தால், அவர் உச்சத்திற்கு செல்வார் என்றும்., தானே முதல் படத்தில் அறிமுகம் செய்கிறேன் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

தாயின் வார்த்தைக்கு இணங்க கனகா தமிழ் சினிமாவில் கரகாட்ட காரன் படத்தில் அறிமுகமானார்., இவரின் முதல் படமே இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது என சொல்லலாம். அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கனகாவை நெருங்கியது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இவர் சென்று கொண்டிருந்த போது தான்., ஒரு சறுக்கல் வரும் படி இவரது தாயின் இழப்பும் கனகாவை நெருங்கியது. சிறு வயதில் இருந்தே தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்து வந்த கனகா., தாயின் இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

அன்றிலிருந்து இன்று வரை அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் தனிமையில் மட்டுமே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி பட்ட சூழலில் தான் முன்னணி நடிகை குட்டி பத்மினி, கடந்த சில மாதங்களுக்கு முன் கனகாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் கனகாவின் நிலையை அறிந்து கொண்ட அவரது பக்கத்து வீட்டுக்காரர் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகவும்., அவருக்கு தொடர் இடையூறு அளித்து வந்ததால் அதனை பொறுட் படுத்திக்கொள்ள முடியாத கனகா நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்..

RELATED ARTICLES

Recent News