“அதிகாரம் அளிப்பதே ஆங்கிலம்” – அமித்ஷா விற்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழிக்கு அழிக்கப்படும் முக்கியத்துவம்., ஆங்கில மொழிக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ஒன்றிய உள்துறை அமித் ஷா கூறிய கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

நேற்று டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரியின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று., புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்.,

“இந்தியாவின் அடையாளமாக திகழ்வது அவர்களது தாய்மொழி” எனவே வெளிநாட்டு மொழிகளை விட நமது தாயமொழிக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்றும் அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை என்றும் பேசினார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..

அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஒரு ஆங்கில அணை அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் ஒரு அவமானம் அல்ல, அது ஒரு சக்தி. ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல, அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.

பாஜக-ஆர்எஸ்எஸ் இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க விரும்பவில்லை – ஏனென்றால் அவர்கள் நீங்கள் கேள்விகள் கேட்கவும், முன்னேறவும், சமமாக மாறவும் விரும்பவில்லை. இன்றைய உலகில், ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போலவே முக்கியமானது – ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும் மற்றும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும் – அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்கும் இந்தியாவிற்கான பாதை இது. என இவ்வாறே தனது அறிக்கையில் அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு பதில் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News