70ஸ்., 80ஸ் கால காதலர்கள்., தங்களது காதலை வீட்டில் கூறிய பின்னர் ஜாதி., மதம், பணம் என்ற பல காரணங்களால் பிரிந்தது உண்டு., அதிலும் சிலர் சேர்ந்தது உண்டு., ஒரு சிலர் வீட்டை எதிர்த்து ஓடி சென்று திருமணம் செய்தது உண்டு.
ஆனால் 90ஸ் கிட்ஸ் களுக்கு பெரும்பாலும் காதல் தோல்வி என சொல்லலாம்., 90ஸ் பிறந்த ஆண் அல்லது பெண்ணிற்கு திருமணம் ஆவது பெரும் பாடாக இருக்கிறது. நல்ல வேலை இல்லை., சொந்த வீடு இல்லை, போதிய வருமானம் இல்லை, பெண் அழகாக இல்லை, பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுப்பார்கள் என இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இதனாலேயே பலரும் தங்களது carrier நோக்கி செல்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு சில 2கே கிட்ஸ்க்கு இதுபோன்ற எந்த பிரச்சனையும் இல்லை போல., பார்த்து பழகி சிறிது நாளிலேயே ஓடி செல்கிறார்கள்..
அப்படி தான் இந்த ஒரு சம்பவமும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தை சேர்ந்த 14 வயது சிறுவனும்., கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்., இந்த வயதில் கல்வி தான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளாத இந்த 2கே கிட்ஸ்கள் பழகிய 2 மாதங்களிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியெறிய இந்த காதல் ஜோடிகளுக்கு, செங்கல்பட்டு மாவட்டம் ஆசிவாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார்., அங்கு 2கே கிட்ஸ்கள் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டு பிடித்துள்ளனர். பின்னர் அச்சிறுவனையும்., அவர்களுக்கு உதவிய ராஜா என்ற வாலிபரையும் கைது செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதுவரையில் சிறார் சிறைப்பள்ளியில் வைத்திடவும்., இவர்களுக்கு உதவிய ராஜா என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.