சிறுவன் கடத்தல் வழக்கு..!! ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட்..!!

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்தை அப்பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனராஜா (அப்பெண்ணின் தந்தை) கூலிப்படை மூலம் தனுஷின் தம்பியான சிறுவனை கடத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக செயல்பட்டு அந்த சிறுவனை மீட்டனர். மேலும் இதனை கடத்தல் வழக்காக பதிவு செய்த போலீசார்,

அரசியல் பிரமுகர் ஜெகன்மூர்த்தியை விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது., அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழக கூடுதல் காவல் துறைத் தலைவர் எச்.எம். ஜெயராம், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் போலீசாரின் சந்தேக நபராக இருப்பதால் இவ்வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இந்த கடத்தல் வழக்கில் உடைந்தையாக இருந்த ஏ.டி.ஜி.பி ஜெயராமை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. குற்றவழக்கில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் அவர்கள் பணி நீக்கம் செயல்படுவார்கள். அதன்படி ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே அவரது சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்., அம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார்..

RELATED ARTICLES

Recent News