“தக்லைப் பட சர்ச்சை..” வரம்பை மீறி செயல்பட வேண்டாம்..!! டி.கே.சிவகுமார் பேட்டி..!!

கடந்த ஜூன் 5ம் தேதி., மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் அபிராமி போன்றோர் நடிப்பில் வெளியான் திரைப்படம் தான் “தக்லைப்”.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது “தமிழில் இருந்து தான் கன்னடன் தோன்றியது” என இவர் கூறிய கருத்து கர்நாடக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..

தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில்., கமல்ஹாசனிடம் கர்நாடக வர்த்தக சபை மன்னிப்பு கேட்க கோரி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு கமல் ஹாசன் மறுப்பு தெரிவித்த நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வர்த்தக சபை தடை விதித்திருந்தது.

இதுதொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்., திரைப்படத்தை வெளியிட ஒருவருக்கு முழு அதிகாரம் உண்டு என்றும்., CBFC சான்றிதழ் உள்ள ஒருபடத்தை திரையிட கூடாது என கூற எவருக்கும் உரிமம் இல்லை என்றும் படம் வெளியான பின்னர் அவற்றை தடை செய்வது ஏற்புடையதல்ல என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமெனவும், வரம்பை மீறி யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தினார்..

தொடர்ந்து பேசிய அவர்., சட்டத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும்., ஒருவர் தன்னுடைய சுய கருத்தை தெரிவிக்க அவருக்கு உரிமை இருப்பதாகவும் பேசினார். கர்நாடகா எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலமாக இருந்து வருகிறது என்பதை மேற்கோள் காட்டி, வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அனைத்து, கன்னட ஆர்வலர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News