அது என்னுடையது கிடையாது..!! ஐடி ரெய்டில் ஆர்யா சொன்னது..? SEA SHELL HOTEL..?

நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா, முதல் படத்திலேயே நல்ல ஹிட் அடித்தார். அதனை தொடர்ந்து சர்வம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, மற்றும் சார்பட்ட பரம்பரை என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் சார்பட்ட பரம்பரை 2, மிஸ்டர் எக்ஸ், போன்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தமிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சயிஷாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் ஒரு பொறுப்புள்ள கணவராக செயல்பட ஆரம்பித்தார். சினிமாவில் சிகரத்தில் இருந்தாலும்., ரியல் எஸ்டேட்., உணவகம் என தொழில்கள் தொடங்கி அதிலும் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தார்.

சென்னையில் மட்டும் “ஷீ ஷெல்” என்ற பெயரில் 5க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வருகிறார். இதன் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் இவரது தம்பி “சத்யா” கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அமரகாவியம் படத்தில் மட்டுமே நடித்த நடிகர் சத்யா., பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஆர்யாவின் தொழில்களை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்., அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் “ஷீ ஷெல்” உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக அண்ணாநகரில் செயல்பட்டு வரும் கிளையில் மட்டுமே 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் பல மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமானவரித்துறை சோதனை குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது, “ஷீ ஷெல்” உணவகம் தன்னுடையது அல்ல என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதனை வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த “ஷீ ஷெல்” உணவகத்தை வாங்கிய குன்ஹி மூசா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News