அரசு தொலைகாட்சி மீது தாக்குதல்..!! பதறி ஓடிய செய்திவாசிப்பாளர்..!!

கடந்த ஜூன் 13ம் தேதி ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதற்கு “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரும் வைத்தது. இந்த தாக்குதலில், ஈரான் படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 320பேர் படுகாயம் அடைந்தநிலையில் ஈரான் நிலைகுலைந்து விட்டதாக ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்திருந்தார்..

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக., கடந்த இரண்டு தினங்களாக மேலாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை மீது “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிர் இழந்த நிலையில்., 34 பேர் படு காயமடைந்துள்ளனர். இதேபோல் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிர் இழந்தநிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஈரான் அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது நேரலை செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிலையில்., இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பெரும் பதற்றங்களுடன் செய்திவாசிப்பாளர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் அடுத்த நொடியே கட்டடம் இடிந்து சிதறியுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…

RELATED ARTICLES

Recent News