“அப்பன் மவனே வாடா..” நடிகர் பார்த்திபன் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும்., இயக்குனாருமானவர் பார்த்திபன். கடந்த 1989ம் ஆண்டு “புதிய பாதை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் பார்த்திபன்., தனக்கு கிடைத்த பாதையை சரியாக பயன் படுத்திக்கொண்ட இவர்., நகைச்சுவை கலந்த தன்னுடைய குண்டக்க மண்டக்க பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து அழகி, வெற்றிகொடிக்கட்டு, நீ வருவாய் என மற்றும் ஒத்தசெருப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதுவரையில் இவர் 16க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 14 படங்களை தயாரித்தும் மற்றும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாகியுள்ள இவர்., தன்னுடைய மகனை தற்போது இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார்.. இதுகுறித்த பிரத்யேக அறிவிப்பை தனது எக்ஸ் வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் மகன் ராக்கி பார்த்திபன்.,என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart., அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்..

RELATED ARTICLES

Recent News