ஈரான் தாக்குதலால் நிலைகுலைந்த அமெரிக்க தூதரகம்..!!

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நீடித்து வருகிறது.. இதுவரையில் 3000 மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தூதராகம் வேதனை தெரிவித்துள்ளது.. இதனிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 4வது நாளாக ராணுவ மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் மாறி மாறி ஏவுகணை ட்ரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் அமெரிக்க தூதரக கிளை மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபீ வெளியிட்டுள்ள அறிக்கையில்., அமெரிக்க சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ஆயுதப் படைகளால் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்..

RELATED ARTICLES

Recent News